Thursday, March 3, 2011

உன்னோடு கோபம்

கத்தியில் வெட்டபடாமலே..உதிரம் சொட்டியது என்னுள்..
வேறென்ன, உன் வார்த்தையினாலே..
என் கோபம் உன்னை குதற.. கிழிந்து நின்றாய் நீயும்..

ஆதி மிருகங்களாய் நாம்!!ஒருவரை ஒருவர் கண்டு உறுமி நின்றோம்...

இது மறையும் என நம்புவோம்..
நான் உனை கண்டு குழைந்து, நீ என்னை கண்டு இழைந்து..
பின்னிய சரடுகளாய், களிக்கும் காலம் வரும்..
அதுவரை...

உன் புன்னகை பூக்கள் காணாத. மனம் பாலைவனமாய்..
உன் தோள் சாயா நான், அசோக வன சீதையாய்..
நீ அருகிலிருந்தும் உனக்காக ஏங்கி..அனலிலிட்டு வாட்டிய இலை கணக்காய்..

வேண்டாம் இனி இந்த அகந்தை கூடிய சண்டை..
எனக்கு நன்று வருவது உன்னை காதலிக்க மட்டுமே..
அது மட்டுமே என்னுடன் நின்று நமை காக்கட்டும்

Monday, February 7, 2011

மரணம்

நீ யாரென நான் வினவினேன்..
மரணம் என்றான்
பயங்கரமான இருளாய் இருப்பானென்று எண்ணினேன்..
கோரமான முகம் அவனதென்று என் முன்னோர் உரைத்திருக்க, அது போல் அவன் இல்லை..

என்னை போலவே மருத்துவமனை வரவேற்பரை மூலையில்; மிக சாதரணனாய் வீற்றிருந்தான்
உயிரை அவனிடத்திலிருந்து காப்பாற்ற விழையும் மருத்துவரிடம், எனக்கிருந்த மரியாதை பார்வைதன் அவனக்கும் அவர் மீது..
பிறந்த குழந்தைகளை நான் கவனிக்கும் அதே குதூகலம் அவனிடத்தும்..
இருந்தும் நான் தான் மரணம் என்றான்!

எங்கிருந்து நாம் வந்தோம் எங்கோ சென்றடைவதற்க்கு..? இந்த கேள்விக்கெல்லாம் விடை நானறியேன், மிக சாமன்யன் நான் என்றாய்..!!
இன்று உன்னோடு ஒடுங்கி செல்ல போகும் நபர் யார் என்றே நான் கேட்டேன்..
உடல் அறியாது, ஆனால் உயிர் என்னை அறிந்து வந்து இணைந்து கொள்ளும் நீ பார் என்றான்..

மரணத்திற்க்கு பெண் பால் இல்லை, எனென்றால், எந்த பெண்மையும் உயிரையும் உடலயும் பிரித்து பார்ப்பதில்லை..
வலிக்கு அப்பால்.. அவர்கள்.. அன்பு செலுத்தியே பழக்க பட்டவர்கள், அதனால், எங்களுக்குள் பெண் பால் இல்லை என்றான்!!

வலிக்கு தன்னை இழந்து படுத்திருக்கும் இந்த முதியவர உன் வேட்டை இன்று என்றேன், வெறுப்பு உமிழ..
பதிலேது அளிக்காது நகர்ந்து நின்றான், யாரயோ எதிர் பார்ப்பது போல்...
ஏனிப்படி..அழும் உறவு குரல்கள், உன்னை உலுக்காதா சொல் என்றேன் கெஞ்சும் குரலில்..

நீ யார், அந்த சாவித்ரி வம்சமோ சொல் என்றான்..? ஏளனம் மிகுந்த ஆனால் பொறுமையான குரலில்!
பெரும் வேதனையுடன் உயிர் எடுக்க மட்டுமே எனக்கு அனுமதி.. உயிரின் பின்/முன் நானறியேன்

நீ யார் என்றேன்.. மரணம் என்றான்.. சக்கரத்தின் கடைசி நுனி நான் என்றான்..
எது சக்கரத்தின் கடைசின் நுனி சொல் என்றேன்.. வினவிய வினா முடியும் முன்னர்
என்னை நகர்ந்து ;வேகமாய் விரைந்து சென்றான்.. அவனை துரத்தியபடி நான்..

9 ஆம் அடுக்கு மாடியின் ஜன்னல் திறந்து -என்னை நோக்கி புன்னகைத்தான்..
அய்யோ யாரோ போயினர் இவன் பின் என வேகமாய் அவனைக் நோக்கி தாவினேன் தடுக்கும் பொருட்டு..

அதிசயம்.. குருதி வடிய கண்டது என்னை நானே..
கை கோர்த்த வாறே.. எனை அழைத்து சென்றான் -தன் பெயர் மரணம் என்றான்..
என் உயிர் அவனை ஆலிங்கனம் செய்ய திகைத்த படி நான்!!


மரணம்

நீ யாரென நான் வினவினேன்..
மரணம் என்றான்
பயங்கரமான இருளாய் இருப்பானென்று எண்ணினேன்..
கோரமான முகம் அவனதென்று என் முன்னோர் உரைத்திருக்க, அது போல் அவன் இல்லை..

என்னை போலவே மருத்துவமனை வரவேற்பரை மூலையில்; மிக சாதரணனாய் வீற்றிருந்தான்
உயிரை அவனிடத்திலிருந்து காப்பாற்ற விழையும் மருத்துவரிடம், எனக்கிருந்த மரியாதை பார்வைதன் அவனக்கும் அவர் மீது..
பிறந்த குழந்தைகளை நான் கவனிக்கும் அதே குதூகலம் அவனிடத்தும்..
இருந்தும் நான் தான் மரணம் என்றான்!

எங்கிருந்து நாம் வந்தோம் எங்கோ சென்றடைவதற்க்கு..? இந்த கேள்விக்கெல்லாம் விடை நானறியேன், மிக சாமன்யன் நான் என்றாய்..!!
இன்று உன்னோடு ஒடுங்கி செல்ல போகும் நபர் யார் என்றே நான் கேட்டேன்..
உடல் அறியாது, ஆனால் உயிர் என்னை அறிந்து வந்து இணைந்து கொள்ளும் நீ பார் என்றான்..

மரணத்திற்க்கு பெண் பால் இல்லை, எனென்றால், எந்த பெண்மையும் உயிரையும் உடலயும் பிரித்து பார்ப்பதில்லை..
வலிக்கு அப்பால்.. அவர்கள்.. அன்பு செலுத்தியே பழக்க பட்டவர்கள், அதனால், எங்களுக்குள் பெண் பால் இல்லை என்றான்!!

வலிக்கு தன்னை இழந்து படுத்திருக்கும் இந்த முதியவர உன் வேட்டை இன்று என்றேன், வெறுப்பு உமிழ..
பதிலேது அளிக்காது நகர்ந்து நின்றான், யாரயோ எதிர் பார்ப்பது போல்...
ஏனிப்படி..அழும் உறவு குரல்கள், உன்னை உலுக்காதா சொல் என்றேன் கெஞ்சும் குரலில்..

நீ யார், அந்த சாவித்ரி வம்சமோ சொல் என்றான்..? ஏளனம் மிகுந்த ஆனால் பொறுமையான குரலில்!
பெரும் வேதனையுடன் உயிர் எடுக்க மட்டுமே எனக்கு அனுமதி.. உயிரின் பின்/முன் நானறியேன்

நீ யார் என்றேன்.. மரணம் என்றான்.. சக்கரத்தின் கடைசி நுனி நான் என்றான்..
எது சக்கரத்தின் கடைசின் நுனி சொல் என்றேன்.. வினவிய வினா முடியும் முன்னர்
என்னை நகர்ந்து ;வேகமாய் விரைந்து சென்றான்.. அவனை துரத்தியபடி நான்..

9 ஆம் அடுக்கு மாடியின் ஜன்னல் திறந்து -என்னை நோக்கி புன்னகைத்தான்..
அய்யோ யாரோ போயினர் இவன் பின் என வேகமாய் அவனைக் நோக்கி தாவினேன் தடுக்கும் பொருட்டு..

அதிசயம்.. குருதி வடிய கண்டது என்னை நானே..
கை கோர்த்த வாறே.. எனை அழைத்து சென்றான் -தன் பெயர் மரணம் என்றான்..
என் உயிர் அவனை ஆலிங்கனம் செய்ய திகைத்த படி நான்!!

Monday, January 17, 2011

குழந்தையின் ஜூரம்

ஒட்டடை அடித்தபடி.. phantom..
இவனுடன்.. crayons கிறுக்கியபடி..superman
comics படிக்கும், batman..
game boy விளையாட அடம் பிடிக்கும் பால அனுமன் என..
இப்படி கலவையாய் இருந்தது..
ஜூரத்தில்.. சுருண்டு உறங்கும் என் மகனின் அறையும் அவனது கற்பனைகளும்..

இதில் அம்மாவிற்க்கு இடமெங்க்கே என்ற என் கேள்விக்கு... ஜுரத்திலும் சுரம் தப்பாமல் வந்த பதில்..

நீதான் office- இருப்பியே.. நீ என் கூட்டம் தவிர்!! என்று சொல்லாலே பொட்டென்று அடித்தான்.. அருமை மகன்.

பொங்கின கண்கள்.. பயலின் வலியொடு என் வலி கூடி..
இங்கிதம் அறிந்து... என் பார்வை தவிர்த்தனர் கதை நாயகர்கள் அனைவரும்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

வருகை தராத விருந்தாளி வந்தது போல் ஆரவாரத்தோடு, வாழ்த்துக்களோடு, நுழைந்து..
கனவுகள் கோடி கண்ணில் தூவி.. அப்புறம், ..சிறிது சிறிதாக,
நீர் குமிழியாய்..நாட்கள் சிதறி...எண்ண குவியலோடு, அங்கும் இங்கும் கரைந்து.,

நியாபகங்களாய் சில தினங்கள் மட்டுமே தேறும்!
சிலது செல்லா காசுகள்.. சிலது, அடித்தது அதிர்ஷ்டம் என எண்ணவைக்கும் பொற்காசுகள்..
இப்படி இந்த வருடம் நம் நெஞ்சில் நாள் குருத்து விட்டு நின்றிருக்கும்!

புதியது களைந்து பழயது ஆகி, மறுபடி புதியது வந்து,
இது ஒர் அலுக்காத கால சக்கரம்தான்!
எல்ல புது வருடங்களும் இப்படித்தான், பிரிக்காத பரிசு பொருளாய் வந்து,
கடைசியில் பழகிய பழந்துணியாய்,.மனதுக்கு நெருங்கிய நண்பனாய் ,
நின்றுவிடும் மனதோடு என்றும்!

கடந்து போகும் எல்லா வருடங்களும் ...
தான் நடந்து, நம்மை வளர்த்தி கொடுத்து;
நின்று கொள்ளும் ஓரு யோகியை போல்.!

சிலுவை சுமந்த யேசுவாய்... வாழ்க்கை சுமந்து நடக்கும் மாந்தர் கடந்து.,
நாள் முட்கள் கொஞ்சமே கொஞ்சம் ஒடித்து போட்டு, சந்தோஷ பையில் முகம் புதைத்து,
ஒரு நாள் நிமிர்ந்து பார்த்தால், நமக்கு புரியுமோ என்னவோ,
சுமந்தது சிலுவை அல்ல, நாமே நம்மைத்தான் சுமந்தோம் என்று!!!

நட்பு வட்டமே.. .
இந்த வருடம், உங்களுக்கு தென்றல் வீசியதா, புயல் பரிந்தளித்ததா என நானறியேன்!
எல்லா ஆண்டுகள் போல இதுவும் உங்களை உங்களாக மட்டுமே விட்டிருக்கும் என,
உங்கள் நிஜங்கள், உங்கள் கனவுகள் உங்களை என்றுமே அன்புடன் அரவணைத்திருக்கும் என நம்புகிறேன்...!

வரும் புத்தாண்டில், ஒரு நாள் போல் எல்லா நாளும்...
நாம் குழந்தைகள் போல்,
பொய்யற்று, கபடற்று, கவலைகள் ஏதும் அற்று., வாழ கந்தன் அருள் இருக்கட்டும்!!!

அகராதி விட்டு அழியும் ஆரோக்கிய குறைபாடுகள்..
சிறிய அளவில் கடன்,..பெரிய அளவில் வரவு!
வானம் தொடும் நம்பிக்கைகள்.., கேணி வற்றா வாய்ப்புகள் ..
.பூஜ்ஜியம் நோக்கி சரியும் கவலைகள், நிஜமாகும் நல்ல கனவுகள்.
புன்னகை நுரைக்கும் மகிழ்ச்சி தருணங்கள்..
கை கோர்த்து நடக்க நல்ல நட்பு மற்றும் உறவுகள்..

இதெல்லாம் கிடைக்க பெற எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

புத்தனுக்கு ஆறுதலா

ஆளுயுரமாய்... அன்புக்கு அடையாளமாய் உன் உருவம்.
யோக நித்திரையில் வீற்றிருக்கிறாய் கம்பீரமாய்..
உனக்குள்ளே இறைத்தன்மை கண்டு.. கை கூப்பி நான்..
காண்பதென்ன?..

என் அகத்தே விரியும் ஒர் கற்பனை காட்சி..
சாந்தம் தவழும் உன் கண்களை தாண்டி..சில மங்கி கிடக்கும் கண்ணீர் துளிகளின் சாயல்
புன்னகை தளும்பும்.. உதடுகளில்..
எங்கோ.. புதைந்த சில வார்த்தைகள் மட்டும் தேடுகிறேன் நான்..

யோகம் கலைந்து என் விழி பிடித்து என்னை உன் நினைவுகளின் நிரல்களில் உலாவ செய்கிறாய்...
ஒர் இரவு..உன் விதி வழி நீ செல்ல நேரிட்ட இரவு..

உன் வெப்பம் நீங்கா மெத்தையில்.. யசோதராவிற்க்காக நீ விட்டு சென்ற கண்ணீர் துளி..
விழுந்து காய்ந்த கரை மட்டும் உன்னை இன்னும் இடை விடாமல் துரத்தியபடி, பிண்ட் தொடர்கிரது பல இரவுகளாய்

இராகுலன், உன் உயிர் நனைய செய்யும் இன்னோர் உயிர்!!
அவனோடு முகம் புதைத்து.. முத்த மழை பொழிந்து.. விளையாடாத விசும்பல்கள் -கனமாய், கனாவாய் உன் இமை அழுத்தும்..

வானவில் பிம்பமாய்.. பல உலகங்கள்.. அடுக்கடுக்காய்.. உன் பத்மாசனமிட்ட தவ்க்கோலம் முன் மறைந்து போனாலும்..
உன் உள்ளே உறைந்து, உலுக்கும் ஒர் உண்மை... உன்னை பிரிந்து இவர்கள் விட்ட வேதனை பெருமூச்சு!
வடுவாய் சுமந்து -வலி தீர்ந்த பின்பும், தடயமாய் உன் மனத்தில்.

கற்பனை கலைந்து நான்,
உன் பிரும்மாண்ட சிலை ஏறி..உன் கன்னம் தடவி. இதுவும் கடந்து போகும், உன் வேதனை கரைந்து போகும் என,
சொல்ல விழைகிறேன்..
காக்கி சட்டை காவல்காரன், என்னை தடுத்தபடி..
என் அன்பு அறிந்து நீ, அழகாய் புன்னகைக்கிறாய்
புத்தனுக்கு ஆறுதலா என்று சிரிக்கிறாய்?