Tuesday, June 29, 2010

ராவணன்!!!Review by Lalitha!!!

ரொம்ப எதிர்பார்ப்போடு காத்திருந்து... போன படம்...
ராவன்-தமிழில் கிடைக்காமல், ஹிந்தி இருந்தாலும் பரவாயில்லை என்ற அக்காவின் பேச்சுக்கு இணங்கி.. குடும்பமாய் கலக்குவோம் என்று குழந்தை பட்டாளத்தோடு போய் இறங்கி...
Pop Corn & Coke cup-களை அவர்கள் கைககளில் திணித்து... சுகமாய் சீட்களில் settle ஆகி..


இனிமேல் Ravan-Review by Lalitha!!!

camera and clarity- இல் கலக்கபட்டிருக்கும் படம்..
படம் முழுவதும் தெரிகிற அந்த physical force is amazing,& Hats off to Rehmaan..Especially for the உசிரே போகுதே song... but other than that .. படம் கண்டிப்பாய் காத்து வாங்கும்...

ஏன் மணிரத்னம் சார் ஏன்? என்று கேக்க தோன்றுகிறது...

மணிரத்னம் அவர்கள், கதை வறட்சியி காமித்தால். இங்கே abhishek and Aishwarya இரண்டு பேருமே.. காதல்/நடிப்பு வறட்சியும் சேர்ந்து காட்டுகிறார்கள்!....

Abhishek படம் முழுக்க தொண்டை கனைக்கிறார், முழி உருட்டுகிறார் அவ்வளவே!!..அய்யோ நிஜ ராவணனே தேவலை என்று தோன்றும் அளவு...
சரி Aishwaryaவோ அதை விட மோசம்... அழகாய் இருக்கிறார், அழ்காய் பயப்படுகிறார்.. அதற்க்குமேல் அம்மணியின் Emotions zero!!!
37 வயதிலும் இவ்வளவு அழகா என்ற பெண்களுக்கே உரிய பொறாமயும் கூட வருகிறது அவ்வளவே!!!

Vikram.. இறுகிய பாறை போன்றா முக பாவம், காதலும் இல்லை, கடமையும் missing...அய்யோ முக்கியமாய் நடிப்பு? எங்கே போனார் அன்னியனில் கலக்கிய Vikram
சரி.. இதெல்லாம் இருக்கட்டும்.. என்ன கதை இதில்.. ராவணனி காதலை, சூர்ப்பனகயின் மூக்கறுப்பாய் different angle-இல்
காண்பிக்க இவ்வளவு மெனக்கெடலா என்று கேட்க தோன்றுகிறது...

என்ன கதை? ஏனிந்த கதை?... மணிரத்தினம் 5-Star hotel என்றால், அங்கு போய் தயிர் சாதமா என்று கேட்க்க தோன்றுகிறது..இதற்க்கா இத்தனை build up என்று..

Violnece-நியாயபடுத்துவது என்ன நியாயம்...? ராவணன் பார்த்து /ரசித்த மக்கள்களுக்கு , உயிர்த்தேன் by தி. ஜானகிராமன் படியுங்கள்... அங்கே தெரியும்...
ராவணனின் அழகான யாரையும் காயபடுத்தா காதல்.. அப்பொழுதும் நியாயமாய் மட்டுமே நிற்க்கும் ராமனின் ஸ்வரூபம்..

வருத்தம் என்னவென்றால், Epic-ஐ differentஆக காமிக்கறேன் என்ற பேர்வழியாய்.. சிதைக்கும் வழி...

இங்கே ராவணன் காதலிப்பது சீதாவையா? அல்லது அவளது உணர்வுகளையா?..ஒருவேளை, சீதா-Aishwarya-வாக இல்லாமல் இருந்திருந்தால் 14 மணி நேரத்தில் இறந்து போய்-கதை முடிந்து வீடு வந்திருப்போம் அவ்வளவுதான்!!!

so சீதா is looking for some one who always adores her, she is not worried about the back ground, situations .. nothing.. ஓரளவிற்க்கு இது உண்மையும்
கூட இல்லையா? எல்லா பெண்களுமே இப்படித்தான் இருக்கிறார்கள்... emotional-ஆக.. சிந்திக்க குழம்பிவிடும் நிலையில்...

சிறுபிள்ளைத்தனமாய் தோன்றலாம், but whatever it is; even if it is a movie-what is there in this for me? என்றுதான் கேக்க தோன்றுகிறது...

So, we can go fall in love with any one even if it is Ravan or Ram as long as he madly in love with you.. காடாவது, வீடாவது.. அவ்வளவுதான் இல்லையா?

Generations have changed, even if sita decided to go with Ravan, ஓ அப்படியா, என்று போய்கொண்டே இருக்கிற உலகம் சார், next time try to come out with a movie
which will leave strong impressions the way you did for கன்னத்தில் முத்தமிட்டால், அலைபாயுதே.. etc.

Disappointed with Raavan/ராவணன்!!!

Tuesday, June 22, 2010

பிறந்த நாள்!!!

என் ஜன்னல் வெளியே ஒரு தேக்கை மரம்..
என் வயதோடு ஏறும் அதன் வளயங்களும்....

வெள்ளி முளைக்கும் வயதும் அல்ல, துள்ளி குதிக்கும் வயதும் அல்ல..
என்னை நானே பிரித்து பார்த்து வியந்து நிற்க்கும் வயதிது..

சுகமாய் இருக்கிறது... இந்த வயது ஏறல்!
கொஞ்சமே கொஞ்சம் சோகமாயும்..

கிளை நிறையும் இலையாய்...நானும், நான் தாண்டி வந்த வருடங்களும்..
எனது அனுபவ்ம் ஒரு ஆல மர குடை..

எனக்கு நானே ஜன்னல்..!! ஜன்னல் உள்ளிருப்பவனும் நானே..
வெளி நின்று உள்னோக்குபவ்னும் நானே!

வாரும் நண்பர்காள்.. இன்றெனக்கு பிறந்த நாள்!!!
என்னுள் புத்தன் ஜனித்த நாள்!!

வாழ்த்தாய் வெள்ளிகீற்றாய் புன்னகை தாருங்கள்..
அன்பளிப்பாய் என் அன்பை அள்ளி செல்லுங்கள்.

Wednesday, June 16, 2010

தாயின் தவம்!!

பாலைவனத்தின் மணல் படுகையில்...படுத்து உறங்கும் காற்றாய்...
நான் காத்திருக்கிறேன்....உன் உயிர் துளி எனை தொடும் நாள் வருமென்று...

விடியதா இரவாய் நீ என்னை தொடாமல் விரைந்து ஒளிந்து விடுகிறாய்..
விளயாட்டல்ல இது,

மலையடிவார காற்றாய் நீ என்னை மறந்து மேல் நோக்கி சென்று மறைந்து விடுகிறாய்
நதியல்ல நான் எனை கடந்து, மறந்து செல்வதற்க்கு...

தரை இருந்த நாளிலிருந்து, நான் உனக்காகவே, இருந்து கொண்டு இருக்கிறென்..

உன் பிறப்பின் வார்ப்பை பதிக்க காத்திருந்தபடி...

நட்சத்திரமே... உனை உதிரத்தில் எடுத்து, உதரத்தில் சேர்த்து, உயிர் வளர்ர்ப்பது மட்டுமே என் வாழ்க்கை

என் மடி வந்த பின், கண்ணாமூச்சி விளயாடு.. வருவதர்க்கு முன்னரே வேண்டாம்...

விடை தெரியா கேள்வியாய் எனை உலக்தின் கொடியில் மாட்டி செல்லாதே.
வீழ்த்திடுவேன் என்னை, உன் உதை வாங்காத என் உயிரையும்.

கதை சொல்லி

கதை சொல்லி நான்,
ஊர் ஊராய் ஊர்ந்து சென்று, கதை விற்று கதை பெற்று வருவேன்....

ஆல மர வேராய் சில கதைகள், அடி மன ஆழத்தில் பாயும்...
சிதறி கிடக்கும் முகில்களுக்கு சிக்கெடுக்கும் தென்றலாய் சிலது...

கடலோடியும் திரவியம் தேடு என்ற மூத்தார் வாக்கிற்க்கு இணங்க...
கதை தேடி நடக்கிறேன்..

ஊர் வெளியே, விரைந்தோடும் நதி வழியே...
வெள்ளை/நீலம் என நிறம் மாறும் வான வெளியே...
என்னை நீவிர் காணலாம்...
கதைக்கலாம்... கண் பனிக்க விடை பெற்று, நெஞ்சினிலே இருத்தலாம்..

வாருங்கள், விதைத்தபடி செல்வோம்... கதைகளை,
உயிர் காற்று விற்ப்போம், அன்பு பரிமாற்றத்தில்...

நீர், நான் எல்லாம் அழிந்த பின்பும்... செல்லரிக்காத நினைவுகளாய்
நம்முடய சில கதை பதிப்புகளை...

எழுதுவதே நியாயமாய், நெருப்பாய்/நிஜமாய் வளர்ப்போம் கதைகளை...
கனவுகள் பரிமாறும்..காதல் சொல்லும், கவிதை சொல்லும் கதைகளை...

கை கோர்க்க நான் .. கதை சொல்ல நீங்கள்... இனியென்ன..
கதை சொல்லி நான்...