Tuesday, June 22, 2010

பிறந்த நாள்!!!

என் ஜன்னல் வெளியே ஒரு தேக்கை மரம்..
என் வயதோடு ஏறும் அதன் வளயங்களும்....

வெள்ளி முளைக்கும் வயதும் அல்ல, துள்ளி குதிக்கும் வயதும் அல்ல..
என்னை நானே பிரித்து பார்த்து வியந்து நிற்க்கும் வயதிது..

சுகமாய் இருக்கிறது... இந்த வயது ஏறல்!
கொஞ்சமே கொஞ்சம் சோகமாயும்..

கிளை நிறையும் இலையாய்...நானும், நான் தாண்டி வந்த வருடங்களும்..
எனது அனுபவ்ம் ஒரு ஆல மர குடை..

எனக்கு நானே ஜன்னல்..!! ஜன்னல் உள்ளிருப்பவனும் நானே..
வெளி நின்று உள்னோக்குபவ்னும் நானே!

வாரும் நண்பர்காள்.. இன்றெனக்கு பிறந்த நாள்!!!
என்னுள் புத்தன் ஜனித்த நாள்!!

வாழ்த்தாய் வெள்ளிகீற்றாய் புன்னகை தாருங்கள்..
அன்பளிப்பாய் என் அன்பை அள்ளி செல்லுங்கள்.

1 comment:

Unknown said...

Very subtle in expressing the thoughts as people age, I guess as we grow older we realize this. i would not have felt probably 10 years ago. Really superb