Wednesday, June 16, 2010

தாயின் தவம்!!

பாலைவனத்தின் மணல் படுகையில்...படுத்து உறங்கும் காற்றாய்...
நான் காத்திருக்கிறேன்....உன் உயிர் துளி எனை தொடும் நாள் வருமென்று...

விடியதா இரவாய் நீ என்னை தொடாமல் விரைந்து ஒளிந்து விடுகிறாய்..
விளயாட்டல்ல இது,

மலையடிவார காற்றாய் நீ என்னை மறந்து மேல் நோக்கி சென்று மறைந்து விடுகிறாய்
நதியல்ல நான் எனை கடந்து, மறந்து செல்வதற்க்கு...

தரை இருந்த நாளிலிருந்து, நான் உனக்காகவே, இருந்து கொண்டு இருக்கிறென்..

உன் பிறப்பின் வார்ப்பை பதிக்க காத்திருந்தபடி...

நட்சத்திரமே... உனை உதிரத்தில் எடுத்து, உதரத்தில் சேர்த்து, உயிர் வளர்ர்ப்பது மட்டுமே என் வாழ்க்கை

என் மடி வந்த பின், கண்ணாமூச்சி விளயாடு.. வருவதர்க்கு முன்னரே வேண்டாம்...

விடை தெரியா கேள்வியாய் எனை உலக்தின் கொடியில் மாட்டி செல்லாதே.
வீழ்த்திடுவேன் என்னை, உன் உதை வாங்காத என் உயிரையும்.

No comments: