Monday, January 17, 2011

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

வருகை தராத விருந்தாளி வந்தது போல் ஆரவாரத்தோடு, வாழ்த்துக்களோடு, நுழைந்து..
கனவுகள் கோடி கண்ணில் தூவி.. அப்புறம், ..சிறிது சிறிதாக,
நீர் குமிழியாய்..நாட்கள் சிதறி...எண்ண குவியலோடு, அங்கும் இங்கும் கரைந்து.,

நியாபகங்களாய் சில தினங்கள் மட்டுமே தேறும்!
சிலது செல்லா காசுகள்.. சிலது, அடித்தது அதிர்ஷ்டம் என எண்ணவைக்கும் பொற்காசுகள்..
இப்படி இந்த வருடம் நம் நெஞ்சில் நாள் குருத்து விட்டு நின்றிருக்கும்!

புதியது களைந்து பழயது ஆகி, மறுபடி புதியது வந்து,
இது ஒர் அலுக்காத கால சக்கரம்தான்!
எல்ல புது வருடங்களும் இப்படித்தான், பிரிக்காத பரிசு பொருளாய் வந்து,
கடைசியில் பழகிய பழந்துணியாய்,.மனதுக்கு நெருங்கிய நண்பனாய் ,
நின்றுவிடும் மனதோடு என்றும்!

கடந்து போகும் எல்லா வருடங்களும் ...
தான் நடந்து, நம்மை வளர்த்தி கொடுத்து;
நின்று கொள்ளும் ஓரு யோகியை போல்.!

சிலுவை சுமந்த யேசுவாய்... வாழ்க்கை சுமந்து நடக்கும் மாந்தர் கடந்து.,
நாள் முட்கள் கொஞ்சமே கொஞ்சம் ஒடித்து போட்டு, சந்தோஷ பையில் முகம் புதைத்து,
ஒரு நாள் நிமிர்ந்து பார்த்தால், நமக்கு புரியுமோ என்னவோ,
சுமந்தது சிலுவை அல்ல, நாமே நம்மைத்தான் சுமந்தோம் என்று!!!

நட்பு வட்டமே.. .
இந்த வருடம், உங்களுக்கு தென்றல் வீசியதா, புயல் பரிந்தளித்ததா என நானறியேன்!
எல்லா ஆண்டுகள் போல இதுவும் உங்களை உங்களாக மட்டுமே விட்டிருக்கும் என,
உங்கள் நிஜங்கள், உங்கள் கனவுகள் உங்களை என்றுமே அன்புடன் அரவணைத்திருக்கும் என நம்புகிறேன்...!

வரும் புத்தாண்டில், ஒரு நாள் போல் எல்லா நாளும்...
நாம் குழந்தைகள் போல்,
பொய்யற்று, கபடற்று, கவலைகள் ஏதும் அற்று., வாழ கந்தன் அருள் இருக்கட்டும்!!!

அகராதி விட்டு அழியும் ஆரோக்கிய குறைபாடுகள்..
சிறிய அளவில் கடன்,..பெரிய அளவில் வரவு!
வானம் தொடும் நம்பிக்கைகள்.., கேணி வற்றா வாய்ப்புகள் ..
.பூஜ்ஜியம் நோக்கி சரியும் கவலைகள், நிஜமாகும் நல்ல கனவுகள்.
புன்னகை நுரைக்கும் மகிழ்ச்சி தருணங்கள்..
கை கோர்த்து நடக்க நல்ல நட்பு மற்றும் உறவுகள்..

இதெல்லாம் கிடைக்க பெற எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

No comments: