Monday, January 17, 2011

குழந்தையின் ஜூரம்

ஒட்டடை அடித்தபடி.. phantom..
இவனுடன்.. crayons கிறுக்கியபடி..superman
comics படிக்கும், batman..
game boy விளையாட அடம் பிடிக்கும் பால அனுமன் என..
இப்படி கலவையாய் இருந்தது..
ஜூரத்தில்.. சுருண்டு உறங்கும் என் மகனின் அறையும் அவனது கற்பனைகளும்..

இதில் அம்மாவிற்க்கு இடமெங்க்கே என்ற என் கேள்விக்கு... ஜுரத்திலும் சுரம் தப்பாமல் வந்த பதில்..

நீதான் office- இருப்பியே.. நீ என் கூட்டம் தவிர்!! என்று சொல்லாலே பொட்டென்று அடித்தான்.. அருமை மகன்.

பொங்கின கண்கள்.. பயலின் வலியொடு என் வலி கூடி..
இங்கிதம் அறிந்து... என் பார்வை தவிர்த்தனர் கதை நாயகர்கள் அனைவரும்

1 comment:

Jammy said...

kadavule... namakku eppa balance panna varum...

Take a break pa