Tuesday, July 6, 2010

பருவக்கால மழை...


பருவக்கால மழை...
நகரம் நனைத்து என்னை மட்டும் குனிந்து முத்தமிட்டு சென்றது!
சிரிப்பு குமிழ்களை வெடித்து விட்டு.. குழந்தையோடு, குழந்தையாய்..
கை கோர்த்து மழை நனைந்தோம்..
நீல குடையிலிர்ந்து முத்துக்கள் சொரிய சூரியனுக்கு ஒர் பாராட்டு பத்திரம் வாசித்தது மின்னல்.
நீரி தெளித்து நீர் அடித்து விளையாடியதில் சந்தோஷம் வெளிச்சமிட்டு நின்றது முகத்தில்!

உடலும், உள்ளமும் குளிர்ந்து.. உயிர் விரிந்து இறைவன் இறங்கிய தரையாய் ஆனது மனம்.

எதோ ஒர் விடுதலை உணர்வு எல்லாரிலும் , எல்லாருடய சிரிப்பிலும்

குடை எரிந்து குடை கீழே நனைய வாருங்கள்..
முத்து உதிர்க்கும் முத்தை எடுக்க வேண்டாம்.. நெஞ்சில் வாங்கிடுவோம்..
வளர்ந்த பின்பும் விளயாடுவோம் குழந்தைகளுக்கு நிகராக ஏனெனில், குழந்தை ஆகும் நேரம் நாம் கடவுளுக்கு நெருங்கும் நேரம்!!

1 comment:

Vardhini said...
This comment has been removed by the author.