Friday, July 23, 2010

மழை-II


மழை..
என்னை சோம்பலாக்கி தான் இடைவிடாது உழைக்கிறது.
வானம் வெளிர்ந்து நிற்ப்பது போல் நானும் நிறமிழந்து நிற்க்கிறேன்...

சந்தோஷ சாரல் ஏன் வடிந்தது என்று நான் அறியும் முன்னர்.. சோகம் அப்பி விட்டது முகத்தில்..
சட்டென்று நான் அசந்த நேரம் பார்த்து புகுந்து விட்டது வெறுமை..
வேண்டும் ஏன்றால் கூட மாட்டேன் என்றது பொறுமை

ஏன் என்று கேட்டால் நான் அறியேன்.. இதற்க்கு நான் பெண் என்ற காரணம் போதும் என்றது மனது.
எல்லாரும் அவசரமாய் எதை நோக்கியோ விரைகையில் , நான் மட்டும் சோர்ந்து...

இப்படித்தான் பல சமயம்... நான் தனித்து போகிறேன்...
காரணங்கள் அறிய விழையாமலே...

மலை மேல் தவித்து தவித்து இறங்கும் காற்று போல்...
மூச்சு முட்டும் உறவுகள்.. புரியாத உணர்வுகள்...
எதையோ எப்பொழுதும் போல் எதிர்பார்த்து..ஏமாற்றம் அடையும் மனது..

நான் கோபித்து கொள்வதற்க்கென்றே கிடைத்த அப்பாவி கணவன்...

ஏன் என்னை பெண்ணாய் படைத்தாய் இறைவா? குழந்தை மனம் குடுக்க மறந்தாய்..

வான் மேல் பறந்தாலும், விண் முகர்ந்து வந்தாலும் நான் நானாய்.. சட்டென்று, நீர் கவிழ்த்த குடுவையாய்..
கலைந்த வானமாய் ஏன் மாறுகிறேன்?

No comments: