Thursday, July 29, 2010

இன்னும் ஒரு நாள்-அலுவலகத்தில்!......


இன்னும் ஒரு நாள்-அலுவலகத்தில்!......

எங்கோ என்றோ நான் யாரையோ அறிந்தும் அறியாமலும் மிதிக்க,
நீ என்னை யாரையோ விட்டு அடிக்க வைக்கிறாய்
முகம் துடிக்க, கண்ணீர் பள பளக்க , ஒன்றும் நடவாதது போல், நான் நடித்த படி...
குனிகிறேன், நிமிர்வதர்க்கு தான் என்றெண்ணிய படி...
இதுவும் கடந்து போகும், என் வேதனை மறைந்து போகும்..

குன்றில் இருக்கும் என் குமரன், நீ என் கவலை தீர்த்து இன்முகம் மீட்டு தருவாய்.

நின்னை சரண் அடைந்தேன் என்று அலறிய என் பாரதியையே விட்டு வைக்கவில்லை, நான் எம் மாத்திரம்?

ஆயினும் குமரா, அடங்கி போ என்று அடக்கியும் அடங்கா மனதின் கேள்வி...உன்னிடத்தில்...

ஏன் இப்படி? என்ன பிழை ஏன் உணர்வுகள் .. வெடித்து, அடி வயிற்றிலிருந்து, வேதனை பொங்கி...

சோர்வடைந்து, கவனம் சிதறி... துக்கம் தொண்டை அடைக்க...

என்ன பாடம் கற்றோம்?... எங்கோ சிதறி விழுந்த சந்தோஷ துளி...எப்படி மீட்போம்?

என் மோன நிலை அடைவதில்லை நான்? ஏன் பொறுமை என்னை தட்டி குடுப்பதில்லை?
நீயோ எங்கிருந்தோ புன்னகைக்கிறாய், சந்தோஷ தருணங்களொடு, இவையும் பகிர் என்னோடு!

No comments: