Friday, July 23, 2010

மகள்

அங்கணம் நிறைய செம்பருத்தி பூக்கள் பூத்திருக்கிறது.. உனக்கு பிடித்த நிறத்தில்....

தோய்க்கிற கல்லும், மஞ்சளரைக்கும் படியும்..
அம்மாவின் அரைத்து விட்ட சாம்பார், உருளை பொரியலோடு, முருகன் library-யில் இருந்து எடுத்து வந்த குண்டு கதை புத்த்கம் வைத்து நீ ஒடியது நினைவில் வர..
அப்பா இல்லாத நேரம் மட்டும் கிடைக்கும் இந்த ஈஸி-சேர்... என்ற உன் செல்ல சிணுங்கல்,
குனிந்து பெருக்காத கற்பகம், உன் குரல் கேட்டதும் கட்டிலடியில் கூட கூட்டும் மாயம்..

சட்டை பையில் வைக்காமல் சிகரெட்டை ஒளித்தும் உன்னிடம் மட்டும் எப்படியோ மாட்டும் தம்பி...

உன் கை வைக்கும் தயிர் சாதம் எதிர்பார்த்து , குரைத்து குரைத்து ஓய்ந்து போன தெரு நாய்...
இவை எதுவும் மாறவில்லை...

நீ மாறிவிட்டாய்.. அரை மணிக்கொரு முறை "அவர்" கதை கூறி எங்களை அலுப்படைய செய்து விட்டாய்!...

அடித்தாலும் உண்ணாத கத்திரிக்காய் அவருக்கு பிடிக்கும் அதனாலே எனக்கும் என்று அசட்டு காரணம் கூறி
அம்மாவின் அர்த்தம் மிகுந்த பார்வைக்கும், புன்னகைக்கும் ஆளானாய்..

அன்று புரிந்தது, உன்னில் மகளை தொலைத்து.. பெண்ணை மீட்டோம் என்று!

No comments: