Thursday, July 29, 2010

suvadugaL


எந்த வழிபோக்கனின் பாத சுவடுகளிது?...
யாரை காண விரைந்து சென்றிருக்கும்..
மணலில் பள்ளம் பரித்து , வீடு செல்லும் பதற்றம் தெரிகிறது இதற்க்குள்....
அல்லது, வீடு திரும்பாமல் , வாழ்க்கை விடை தேடி வீடு தாண்டியிருக்குமா இந்த பாதங்கள்..?

ஏதாயினும் சரி.. தனியாய் தவமாய் சோகம் சுமந்து சென்றிருக்கும்...
தோள் சாய, கை கோர்க்க, ஆளின்றி... தனிமை என்னும் சுமை சுமந்து... பாலைவன படுகயில் கண்ணீர் கரைத்து...
காற்றின் வழி சென்ற போக்கன் இவன் யாரோ? எது ஊரோ?

போர் முடிந்து புகலிடம் தேடும் வீரனின் ஒட்டத்தின் பதிவோ?
எந்த ஊரின் அமைதி குலைந்த்தோ?.. (அ )எந்த ஊரின் அமைதி நிலை நாட்ட இந்த பரிதவிப்போ..?

என்ன கதறுகிறது இந்த பாலைவனம்.. போகாதே என்றா? இல்லை அய்யோ அழிந்தது சாம்ராஜ்யம் என்றா?

முடிவுபெறா கடிதம் போல், கடைசி பக்கம் கிழிந்த கதை புத்தகம் போல்... இந்த சுவடுகளும் எதை சொல்ல விழைந்து
விட்டு விட்டது நம்மை யூகிக்க!!

No comments: