Friday, July 30, 2010

சந்தோஷ சாரல்


சந்தோஷ சாரல்,
என்னை தழுவ அனுமதி கேட்டு, தொட்டு தொட்டு நின்றது...

காதை கிழிக்கும் வாகனங்கள், என்னை, கண்டதும் அமைதி காத்தன..
சிடுசிடுக்கும் conductor, சிரித்தப்படி ticket கிழித்தான்..

பூக்கார கிழவி முழம் பொய் சொல்லாமல் கையில் குடுத்தாள்..
கோவிலில், கூட்டமில்லை, கடவுளுக்கும் எனக்கும் இடையில் யாருமில்லை...

உலகமே என்னை சந்தோஷமாக இரு என்று சொன்னது போல்,
நிரம்பி வழிகிறது மனது, நான், யாருக்கும் விரோதி இல்லை

அகம் மலர்ந்து இன்முகம் காட்டும் ஒவ்வொருவரும் என் நண்பர்தான்..
அட இருக்கும் அரை நாள் வாழ்க்கையில் வேதனைக்கு குத்தகை விட்டு விட்டம் பார்க்கவா நாம் பிறந்தோம்
வாரும் மக்கட்காள், நட்புடன் கை கோர்த்திடுவோம் வாழ்க்கையோடு..

அன்புடன்
L

2 comments:

Jammy said...

Romba azhaga irukku, very promising

Kalps said...

Beautiful!