Friday, March 19, 2010

கனவுகள் இலவசம்!!!

அட
கனவுகள் இலவசம் என்றார்கள் அங்கே..
எங்கே என்று என்னை கேட்க்காதே...

எங்காயினும் சரி இலவசம் என்றால் ..அங்கே
ஒரு க்யூ அமைத்து நிற்க்கும் மத்தியமரின் மத்தியில்...
நீ என்னை காணலாம்!!!

என்னை மட்டும் அன்றி, என்னை போல் பலரை...
கண்ணில் சொந்த கனவுகளின் வழியலோடு.....

இலவசத்தையும் விட்டு வைப்பானேன் என்று எண்ணும்
மக்களின் பதிப்பாய் நானும்..

நீ அவ்வரிசையில் உள்ளாய் அல்லது இல்லை நான் அறியேன்..

எப்படியோ இப்படியாயினும் கனவுகள்
மக்கள் மத்தியில் பரவினால்..
நமக்கு ஒரு சந்தோஷம்..

அட என்ன போலித்தனமான "சந்தோஷம்" இது?!
எல்லா செயல்களிற்க்கும், சிந்தனைகளுக்கும்
நியாயம் கற்ப்பிக்கும் எண்ணம் ஏன்?

இலவசமாய் இல்லாவிடிலும்..
எனக்கு வேண்டும் என் கனவுகள்...


கனவுகளின் முதுகில் ஏறி கனவு காணும்
பொழுதேனும் இவ்வுலகம் என் வசம்..

எல்லாரையும் இறைவனாய் மாற்றும் ஒரு கணம்..
நாம் கனவு காணும் நேரம் !!!


ஆம் பின்னே.. நாமே படைத்து , நாமே மறக்கலாம், அழிக்கலாம்
அல்லது ஆக்கவும் செய்யலாம்..

கடவுளின் அற்புத கனவு மானுடம் என்றால்...
ஏன் மானுடம் கனவை விஸ்த்தரிக்காது வீழ்ந்து கிடக்க வேண்டும்?

இலவச கடைகளில் தேடாது, தன்னுள் தேட வேண்டிய கனவை.. கடையில்
கேட்கும் அவலம் ஏன்?

கேட்பது என்று முதல் அவலமாயிற்று...?
கேட்பது கற்ப்பதின் முதல் படியன்றோ....

No comments: