Friday, March 19, 2010

அசையா வானம் வேண்டி...

அசையா வானம் வேண்டி...
------------------------------

தனிமை திமிங்கலமாய்,
தவறுகள் செய்ய தூண்டுகிறது

தனிமை தெய்வீகமாய் அதே
தவறுகளுக்கு "சலவை கட்டி" தேடுகிறது

ஏனிப்படி இரு அவதாரம்?
எதற்க்காக இந்த தவிப்புகள்.....

தவறை சுற்றி, தேவைகளை சுற்றி
தவம் கலைந்த முனிவர் பொல்,
ஏனிப்படி ஒர் அலைச்சல்?

யாரிடம் எனக்கு என்ன கோபம்?
யாரில் என்னை தேடுகிறேன்...?

நித்தம் நித்தம் தொலைந்து போகிறேன்
யுகங்களாகி விடுகிறது என்னை மீட்க....

என் வானம் ஏன் இப்படி இடம் மாறிகொண்டே இருக்கிறது?
யாரை நான் கேள்வி கேட்டு கொண்டே இருக்கிறேன்?

எனக்குள்ளிருக்கும் "என்னையா"? இல்லை,
எங்கும் நிறைந்திருக்கும் இறைவனையா?....

யார் வேண்டும் எனக்கு?
மண் கூடு கரைந்து என் "மனிதன்" என்னை மீண்டெடுப்பானா?
எனக்கென்றோர் அசையா வானம் நிறுத்தி தருவானா?

சார்ந்து வாழ்வதென் இயல்பா?
அதற்க்கு பெயர்தான் பெண்ணா?

கரைந்து போன மணிதுளியாய்..
நான் அழிந்து கொண்டிருக்கிறேன்
கடந்த காலத்தில்...

என் நினைவுத் தகடுகளின் சுமை
கூடிகொண்டே போகிறது

சமுத்திரத்தின் முடிவில்லா அலை இயக்கம் போல்...
நான் பிறந்து கொண்டே இருக்கிறேன்,
ஒவ்வொரு யுக துவக்கத்திலும்.

என் பிறப்பின் வார்ப்பும்,
இறப்பின் நிகழ்வும்.. பூமியில் பதிந்து
கொண்டே இருக்கிறது...

பெருமூச்சிட்டப்படி, காலப் பிரம்மன்
கரை தட்டுவான், தன் "ஜனன கப்பலை" என்றேனும் ஒரு நாள்..

அந்த பொழுதில்
புரட்டி பார்ப்பேன், என்
நினைவுத் தகடுகளில், என் பதிவுகளை...

No comments: