Friday, March 19, 2010

கடிதம் குழந்தைக்கு!!!

உலகமறிய ஓர் மன்னிப்பு கடிதம்
உனக்காக உயிரே....

உன் மடித்த உதட்டின் கேவல்களில்,
கிழிந்து எறியப்பட்டேன் நான்!

கால் உதைத்து எனக்காக நீ அழுது, நின்றது,
என்னுள் காலம் இழுத்த அழியா சூடு!!

ஸோஃபாவில் சுருண்டு நீ,
உறங்குகயில், உன் காய்ந்த கண்ணீர்கோடுகள்,

இடித்து காட்டும். உன்னோடு நான் விளையாடமல்
போன மாலை நேரங்களை....!

சிதறிய பூக்களாய், நீயும் உன் நண்பர்களும் பஸ்ஸிற்க்காக நிற்க்கையில்,
உன்னோடு நான் நிற்க்காத சோகம் உன் கவிழ்ந்த முகத்தில்.

மாலை வீடு திரும்பியும், மிரட்டும் அலுவலக வேலைகளில்..
நீயும் அதட்டப்படுவாய்

உஷ்..! உஷ்!! என்று உன்னை அடக்கியபடியே எடுப்பேன்
என்னுடய கான்ஃபரன்ஸ் கால்ஸ் அனைத்தயும்

உணவு ஊட்டுவதும், உறங்க வைப்பதும்.. எல்லாமே
ஒரே வார்த்தைக்குள் அடக்க படும்- டைம் ஆச்சு!!

நிலவும், நட்சத்த்திரமுமாய் கொட்டி கிடக்கும் வான வெளி...
நம்மிருவருக்குமாய் சேர்ந்து ஏமாந்து.. வெள்ளி முளைக்க
உத்தரவிட்டு செல்லும்!

உன்னிடம் உள்ள நேரமனைத்தும் எனக்காக நீ காத்திருப்பதில் கரைந்து விடுகிறது.
என் நேரமனைத்தும் உன் எதிர்காலமென்ற பெரிய கனவில் கரைந்து விடுகிறது


அழகான கனவொன்றை நேற்று உரைத்தாய் நீ!

அம்மா! நீ, தேவதை போல் இறக்கை கட்டி என்னுடனே இருந்தாய்,
பறந்தாய் மற்றும் சிரித்தாய் என்று!

சுருண்டு விட்டது என் மனசாட்சி..
உன்னை கண்டு சிரிக்காது
நான் வீணடித்த மணித்துளிகளை நினைத்து!!

உன் வலி நான் உணர்வேன்..
என் வலி நீ உணரும் நாள் வரும் வரை காத்திருப்பேன்..
அது வரை என்னை மன்னித்து என் மனச்சோர்வு களைவாய்...

1 comment:

Vardhini said...

Superb Lalitha! Pranav will treasure these once grown up. Nice to see you active in the blog....keep it up