Friday, March 19, 2010

இரயிலோடு சினேகம்

எல்லா புகை வண்டி சந்திப்புகளிலும்..
எதோ ஓரு சினேகம் அறுந்த
அல்லது பிணைத்த கதைகளின்
தடயமிருக்கும்.

தட தடத்து இரயில் ஊர் தாண்டி
ஊர், பறந்து வர,
பரிவாய் பிறந்தகம் அழைக்கும்
தோழமை நிச்சயமிருக்கும்.

மழை கழுவிய காயங்கள்,
வெயில் சிரித்த நேரங்கள் போக,
உரையாட விஷயம் எதேனும்,
நிச்சயமிருக்கும்.

யார் கண்டார்?...
தமிழ் மொழி..போல் இரயில் மொழி
என்றேதானும் உருவாக்கப்பட்டு,

இரும்பு தோன்றா, தண்டவாளம் தோன்றா
முன்பே தோன்றியதுவாம் "இரயில் மொழி"..

என்று ஏதேனும் இரண்டு இலக்கியய்
இரயில்கள் கொடி பிடித்திருக்கும்.

வந்து போன எல்லா பயணிகளுக்கும்,
இடமளித்து, அவர்களில் ஏற்ப்படும்..
சண்டை, இடையூறை, மௌனமாய் ரசித்து,
இரைந்து பாய்ந்திருக்கும் இடை விடாமல்!

ஒரு தவமென, யாகமென
இரண்டு, தண்டவாளத்துகிடையே பிசிறாமல்
ஓடி ஓடி சேர்திருக்கும் பல ஊர்களை!

வழி பிறழ்ந்த இரயில்களின் இயலாமையை
இரவில் நிசப்தமாக ஆராய்ந்தவாறே
ஆழ்ந்திருக்கும் தன் வேலையில்...

மனிதனுக்காக மட்டுமேயன்றி..
தனக்காகவும் தடயங்கள் அது வைத்திருக்குமா
என்று கேட்டு வைக்க வேண்டும், எங்கேனும்
இரயில் மொழி கற்று ஒரு நாள்!!!

No comments: