Friday, March 19, 2010

காத்திருப்பு!!!

கல்லூரி நாட்களின் மற்றுமொரு கவிதை...

குறைந்த பட்சம் ஓர் அரைப் புன்னகை
நீ வீசியிருந்தால்
வெயிலடித்த..
என் ஜன்னல் கதவு குளிர்ந்திருக்கும்...

நரைத் தெரியும் காலை வானமாய்
இரவின் அரை நிலவாய்
நீ என்னுள் உலவுகிறாய்

வீதி எதோ, நான் அறியாத
ஓர் தெருவில் மோனப் புத்தனாய்..
தாடி சொறிந்து நடந்திருப்பாய்
இப்பொழுது..

நண்பர்களுக்காக, இன்று,
வராத பஸ்ஸிற்க்காக தினமும்,

எப்பொழுதேனும் இரவில்
உனக்காகவும்,

விழித்திருந்து காத்திருக்கிறேன்...

No comments: