Friday, March 19, 2010

கடவுளோடு ஒரு உரையாடல்..ஊருக்காக...

என்ன எழுத நான்?

என் மோனத்திலிருந்து துயிலெழுந்தேன் இன்றுதான்...
எதோ தவமாய் நான் காணும் ...
ஒவ்வொரு நொடியும் இறைவனது என்று எண்ணி...

இன்றல்ல நாளை எனக்காக சில மணிதுளி என்று ஏமாந்து... ஒத்தி வைத்தேன் என் எழுதலை..

வாழ்க்கையின் என் பதிப்பை எழுதமால் போனேன்...
என்னை கண்டு இறைவன் சிரித்தார்...


இனி டயலாக் கன்வர்ஸேஷன் கடவுளுக்கும் எனக்கும்:

இறைவன்:

உனக்கென நீ ஒதுக்கும் துளிகளில் அல்லவோ நான் இருந்தேன்...
பொய்களில்லா பூமி சமைத்து அதில் ஆர்வம் நட்டு,

நான் நடத்த நல்ல செங்கோல் தருவாய்
என்றெல்லவோ நினத்தேன் நான்..

மனம் விரும்பும் நிஜம் மட்டும் உரைக்காமல்,
மனம் தாங்கும் உண்மைகள் வளர்ப்பாய் என்று நினைத்தால்,
பொய்களில் அமிழ்ந்து விட்டாய் நீ குழந்தாய்.. என்றார்..

நான்:


என் தேம்பலை கவனிக்காது.... நீர் சுமத்தும் குற்றம் நியாயமா?..

கடவுள்:


என்னை எல்லா மூலைகளிலும் தேடும் நீ,
எல்ல திருப்பதிலும் என் உதவி நாடும் நீ,

உன் பொய்களில் என்னை மறந்து விடுகிறாய்...
"கன்வினியன்ஸ் ஆஃப் தாட்ஸ்" என்பது இதுதானா என்றார்?

நான்:


பொய்களிலா நான் அமிழ்ந்திருக்கிறேன்.. என்ன பேத்தல் இது?...
வேலை, கடமை பொய்யாகுமா?

கடனின்றி, கபடின்றி, நான் வாழ வேலை,
அதன் உழைப்பு முக்கியமில்லையா? என்றேன்....

வேடிக்கை கலந்த வேதனையுடன் கடவுள்:


அசட்டு பெண்ணே....நீ படைக்கும் கவிதைகளிற்க்கு

கண நேரம் தருவது உனக்கு கஷ்ட்டமா என்றார்?

வேலை என்ற பெயரில் நீ பயப்பட்டு கபடத்தில் இறங்கும் நேரம்
எல்லாம் நான் உன்னை விட்டு விலகி விடுகிறேன்... நீ அது அறியாது,
என்னை தேட நான் உனக்காக தவிக்கும் தவிப்பு
நான் அல்லவோ அறிவேன்...என்றார்.

கோவமாக நான்:


அய்யா...வாழவும் சொல்கிறீர், வாழ குடுத்த உலகமோ பொல்லாதது...
கொஞ்சம் பிசகினால், மிதித்து மிழுங்கி விடும்..

நீரோ கண்ணுக்கு தெரியாத மோன லோகத்தில்,
மனசாட்சியாய் வந்து, வம்பு பேசி மறைந்து விடுவீர்...
நானல்லவோ மாட்டிருக்கிறேன் இங்கே... என்றேன்.

அன்புடன் கடவுள்:


வாயாடி பெண்ணே..வாழ வழி கேட்டாய் சொன்னேன்..
வீழ்வதற்க்கும் வழி இருக்கிறது..
மேலே எழவும் வழி இருக்கிறது...

நீ எழாமலே என்னை குறை குறினால்,
நான் வேண்டாவா வரம் கொடுக்க என்றார்..

பணிவுடன் நான்:



எனக்கு என்றுதான் புரிந்திருக்கிர்து நீங்கள் கூறும் கூற்று..
இதோ நான் வந்து விட்டேன் என் எழுத்துலகத்தில்..
இனி என்னை வழி நடத்துவீரா? என்றேன்...

இறைவன்:


எப்பொழும் போல் மாய புன்னகை கொடுத்தார் மறைந்தார்...!!!


Hope to continue the blogging ...

No comments: